சிவகங்கை அருகே நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கிராமத்தினர்.....

சிலர் அதை கேலி செய்தாலும் சிலர் அதற்கு மனமுவந்து பணம் கொடுத்த உதவி செய்தனர். காலையில் கருத்தம்மாவை குளிப்பாட்டி துண்டு, மாலைகள்,மல்லிகைப்பூ அணிவித்து சந்தனம், குங்குமம் நெற்றியில் இட்டு கால்களில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடந்தது. வளைகாப்பிற்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கருப்பிக்கு வளையல் அணிவித்து அட்சதை தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்தனையும் கருத்தம்மா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டாள். வளைகாப்பிற்கு வந்திருந்தவர்களுக்கு மதுவுடன், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. இது குறித்து வளைகாப்பு நடத்திய பழனி, மணிகண்டன்,ரமேஷ் இளமதி கூறுகையில்., ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் லட்சக்கணக்கில் சரக்குகளும் பணமும் இருக்கும் இரவு நேரங்களில் இவற்றை பாதுகாக்க ஆட்கள் சென்று வந்தனர். கருப்பி வந்ததில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் இங்குள்ள கடைக்கும், பாருக்கும் அருகில் யாரும் நுழையவே முடியாது. அந்த அளவுக்கு கருப்பி காவல் பணியில் ஈடுபடுவதில் கெட்டிக்காரி. தவிர குடிபோதையில் பணத்துடன் படுத்துக்கிடப்பவர்கள் பாக்கெட்டில் பணம், வாட்ச், தங்க நகைகளை அடுத்தவர் திருடிச்செல்ல விடாமல் குடிபோதையில் இருந்தவர் தானாக எழுந்து செல்லும் வரை அவரை பாதுகாக்கும். திருடும் நோக்கில் வருபவர்களை பாரில் நுழையவே விடாது. அதனால் தான் இதற்கு நன்றி கடனாக மனிதர்களின் முதல் பிரசவம் நல்ல படியாக நடக்க வளைகாப்பு செய்வது போல செய்தோம் என்றார்.
கருத்துகள் இல்லை