Header Ads

  • சற்று முன்

    ஹசினியை கொன்ற கொலையாளியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

    சென்னை : சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.



    சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹாசினி (7), கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து காவல்துறையில் ஹாசினியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தஷ்வந்த் (22) என்பவர் பிடிபட்டார்.




    இந்நிலையில், நீதிமன்றத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியில் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின், தாடியை எடுத்துவிட்டு முடிவெட்டிக் கொண்டு திரிந்த தஷ்வந்தை மீண்டும் போலீஸ் கைது செய்தனர்.
    தற்போது, அவரை தமிழகப் போலீஸார் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க    சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். டிசம்பர் 12 ஆம் தேதி போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர் படுத்த உள்ளார்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad