RK நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்யை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரச்சாரம்
RK நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்யை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரச்சாரதில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தண்டையார்பேட்டை, வண்ணார்பேட்டை பகுதிகளில் வாக்குச் சேகரித்து வருகிறார். இன்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, திமுக சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் ரத்தினசபாபதி தெரு, கிருஷ்ணப்பர் தோட்டம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.
அப்போது பேசிய மருதுகணேஷ், திமுக வெற்றிபெற்றால் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர், குடிநீர் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை