பிரதமர் மோடியின் வெற்றிக்கு ஸ்டாலின், எடபடி பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் பாஜக வெற்றிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே, இருமாநிலத் தேர்தல் வெற்றிக்காக பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கூறினார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதனிடையே, இருமாநிலத் தேர்தல் வெற்றிக்காக பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக கூறினார்.
கருத்துகள் இல்லை