Header Ads

  • சற்று முன்

    நீதி மன்றத்தில் போலி ஆவணங்கள் வழங்கியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு



    நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பாரி என்பவர், தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலத்தை மன்சூர் அலிகானும் அவரது மனைவி அபிதாபானுவும் அபகரித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் பாரி குடும்பத்திற்குச் சொந்தம் என கடந்த 2010ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எனினும் பாரியின் தந்தை அப்பாவு தன்னிடம் நிலத்தை கிரயத்திற்கு விற்று விட்டதாகவும் அந்த நிலத்திற்குரிய பவர் தன்னிடம் இருப்பதாகவும் ஆவணம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மன்சூர் அலிகான் மறுபடியும் வழக்கைத் தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்தது போலி ஆவணம் என்றும், மன்சூர் அலிகானும் அவரது மனைவியும் தன்னை மிரட்டுவதாகவும் பாரி சூளை மேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்தல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சூளை மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad