Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகரிகள் சீல் வைத்தனர் . நமது நிருபர் .



    கோவில்பட்டி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் புதிய வாடகை கட்டணம் மற்றும் முன் வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வரை பலர் வாடகை செலுத்தமால் இருந்தனர். இந்நிலையில் வாடகை செலுத்தவில்லை என்றால் கடைக்கு சீல்வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது



    இதனை தொடர்ந்து பலரும் புதிய வாடகை கட்டணத்தினை செலுத்தினர். ஆனால் 2 கடைகள் மட்டும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையெடுத்து நகராட்சி வருவாய்துறை அலுவலர் ராஜேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில்இன்று 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதையொட்டி பிரச்சினை எதுவும் நிகழாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
                                                                                                                                                                   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad