வங்க கடலில் புயல்.. சென்னை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகி உள்ளதால் சென்னை மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவான ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. ஆனால் ஓகி புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் நிலை என்ன என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் சென்னை மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை