Header Ads

  • சற்று முன்

    விடுபட்ட வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கும் பணியில் காவல்துறையினர்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தி.மு.க புகார் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு, இன்று காலை முதல் லேசான நிம்மதி கிடைத்திருக்கிறது. இடைவிடாத போராட்டம், சாலைமறியல் என்று தினமும் பொதுமக்கள் வீதியில் கிடந்த நிலை இன்று மாறியுள்ளது. "உரிய ஆவணங்களுடன் வந்தால், இறுதிப்பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம்" என்று புதிய தேர்தல் அலுவலர் பிரவீன் பி.நாயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad