Header Ads

  • சற்று முன்

    2018ஆம் ஆண்டு முதற் கூட்டத் தொடர் ஜனவரி 8 ஆம் தேதி துவங்கும் .


    சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை, ஆளுநர் வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். 12ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தொடரைப் பொறுத்தவரை ஆளுநராக பன்வாரிலால் பங்கேற்ற பிறகு நடைபெறும் முதல்கூட்டத் தொடர். 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகும், ஆர்.கே.நகர் தொகுயில் இருந்து சுயேச்சையாக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad