T.T. K. சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோகள் மீது சொகுசு கார் மோதி விபத்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoPhdEzj7ysEuYMK-bmYBoVnx3VqxW-HB4F6VPcTepi29MfWMR71ridRzJwxsUcKTqBsHNP7ps7e54yZBJOO6lF6YQfYIlok6JKr8P5HFakb-YeT2JLt4NGKynAoHPoAyhALSkxcMtIng/s400/auto-accident.jpg)
சென்னை டிடிகே சாலையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்களின் மீது சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலியாகி உள்ளார்.
சென்னையில் உள்ள டிடிகே சாலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி உறங்குவது வழக்கம். நேற்றும் இதே போல், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு உறங்கினர்.
இதனையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவர்கள் குடித்துவிட்டு காரை வேகமாக ஒட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை