Header Ads

  • சற்று முன்

    எட்டயபுரத்தில் விபத்துபகுதியான நான்கு வழிச்சாலை




    எட்டயபுரம் – விளாத்திகுளம் - கோவில்பட்‍டி  செல்லும் சாலையின் குறுக்கே எட்டயபுரம் கீழவாசல் பகுதியில் நான்குவழிச்சாலை அமைந்துள்ளது.

    தினசரி காலை மாலை மற்றும் இரவு நேரங்களில் நான்குவழிச்சாலையைத் கடந்து தான் விளாத்திகுளம் மற்றும்கோவில்பட்‍டி  நகருக்கு அடிக்கடி பேரூந்துகள்  லாரிகள் செல்கின்றன. மேலும் எட்டயபுரத்திற்கு கிழக்கே, அமைந்துள்ள பத்துக்கும்மேலான கிராமங்களைச் சோர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள்  எட்டயபுரம் நகருக்கு மருத்துவமனைக்கோ,கடைகளுக்கோ, பள்ளிகளுக்கு வருகிறார்கள். வருகிறவர்கள் பேரூந்துகளிலோ, இருசக்கர வாகனங்களிலோ நான்குவழிச்சாலையை குறுக்கே கடந்து செல்ல வேண்டும் அதே போல் நடந்து செல்பவார்களுக்கும் இது பொருந்தும்.



    இவ்வாறு எட்டயபுரத்திற்கு மேற்கே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்காக நான்குவழிச்சாலையைக் கடந்து வரவும் மீண்டும் செல்லவும் வேண்டியுள்ளது. இந்த நிலையில் கீழவாசல் அருகேயுள்ள நான்குவழிச்சாலையைக் கடக்கும் பொழுது பல விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. 


    கீழவாசல் பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலைக்கு மேலே பாலம் அமைக்க வேண்டி  நகரிலுள்ள அரசியல் கட்சியினர்அரசுக்கும், நான்கு வழிச்சாலை அமைத்த நிறுவனத்திற்கும்  கோரிக்கை விடுத்தனர் மற்றும் பல போராட்டங்களும் செய்தார்கள். ஆனால் மேம்பாலம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதேசமயம் விபத்துக்கள் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, எனபொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே  பொதுமக்களின்  நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 

                                                        இளசை ‍லெனின்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad