அதிகாலை ஜெயா டிவியில் வருமான வரி அதிரடி சோதனை
சென்னை: சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசி மகன் விவேக்தான் இதை நிர்வகித்து வருகிறார். மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ்சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருத்துகள் இல்லை