Header Ads

  • சற்று முன்

    தினகரன் ஆதரவாளர்களை குறி வைக்கும் வருமான வரி துறை



    சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்பட 200க்கும் அதிகமான  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

    தனித்தனி குழுவாக வந்த வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இதேபோல், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜின் ஆதரவாளரும், ஜெ. பேரவை மாவட்டச் செயலருமான பொன். வாசுகிராமுக்குச் சொந்தமான பூக்கொல்லை சாலையில் உள்ள வீடு, அமைச்சரின் உறவினரும், வழக்குரைஞருமான எஸ். உதயகுமாரின் வீடு என மொத்தம் 14 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 

    திவாகரனின் நண்பர் ஓய்வுபெற்ற வேளாண் துறை துணை இயக்குநரான த. நடேசன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவிலும் சோதனை நீடித்தது. இதில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. 


    நாமக்கலில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வழக்குரைஞர் பாலுச்சாமி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. நாமக்கல்லில் 5 இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கேயே ஓய்வு எடுத்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad