இந்திய விஞ்ஞானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGD5MkoEUy8CPgVWH68CuBDiOXWIl5UzHjYV-Ym8ZXou1gdFr2NnifWhsu-X2GoY1x_Kkx8DAf6Nk3dl5oytoTX4FuUh3W4SVAM0PjNom1yeHXJSvTxSeqYReRSUFRIrMGpoEfsHKl3o4/s400/pm+-1jpg.jpg)
தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு
ஆசியநாடுகளிலும் அரிசி முக்கிய உணவாக உள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லாஸ் பனோஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர்.
ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்பட்டு வரும் புதிய நெல் ரகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மண்டல மையம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களையும் அவர் கேட்றிந்தார்.
கருத்துகள் இல்லை