உச்சநீதிமன்றம் உத்தரவு !
உச்சநீதிமன்றம் உத்தரவு !
தற்கொலை விளையாட்டான, ப்ளூவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தியாவை ஒட்டுமொத்தமாக பாதித்த ஒரு இணையதள விளையாட்டு ப்ளூவேல். இதன் கோரமுகத்தை இன்னும் நம்மால் மறக்க இயலாது.
வட இந்தியா தொடங்கி தமிழகம் வரை அதன் கோர முகத்தை பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ப்ளூவேல் விளையாட்டால், கேரள ,சேலம் ,நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
சிவகாசியில் உள்ள மாணவர் ஜெகதீஷ், திருநெல்வேலியின் சிறுமி இப்படி பலர் தற்கொலைக்கு முயன்றனர்.இதனைமுன்னிட்டு இணையதளங்கள், மற்றும் சமூகவளைதங்களில் ப்ளூவேல் தொடர்பாக லிங்குகளை பகிரக்கூடாது என்றும் அதை மீறுபவர்கள் கைது செய்யபடுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, தூர்தர்ஷன் தொலைக்காட்சி,நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை