Header Ads

  • சற்று முன்

    எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு - கமல்...

    எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு - கமல்.....

    களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நேரில் பார்வையிட்டார்
    கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு நடத்தினார்.

    தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் முதல்வராகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையில் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படப்போவதாக எச்சரித்தார்.
    ‘எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன’ என்று அவர் கூறியிருந்தார்.
    இந்நிலையில், இன்று எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்களைச் சந்தித்த அவர் சாம்பல் கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிந்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad