Header Ads

  • சற்று முன்

    தீக்குளிக்க முயன்றவர் மீட்பு

    குடும்பத்துடன் காவல்துறை அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் மீட்பு


    கோயமுத்தூரில் மாநகர காவல்துறை அலுவலகம் முன்பு தனது மகனுடன் தீக்குளிக்க முயன்றவரை போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
    நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பமே தீக்குளித்து உயிரிழந்த சோக சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    இந்த சம்பவத்தின் அதிர்வு அடங்குவதற்குள், இதே போல் மற்றொரு சம்பவம் கோயமுத்தூரில் அரங்கேறியுள்ளது.
    கோயமுத்தூரிலுள்ள மாநகர காவல்துறை அலுவலகம் முன்பு இன்று காலை, தனது மகனுடன் வந்த ஒருவர், புரோக்கரிடம் இருந்து தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
    இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்த போலீசார், அவர்களை மீட்டு கொண்டு சென்றனர்.இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்த போலீசார், அவர்களை மீட்டு கொண்டு சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad