Header Ads

  • சற்று முன்

    தேவர் ஜெயந்தி..முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

    தேவர் ஜெயந்தி..முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்
    Image result for madurai tasmac
    மதுரை: மருதுபாண்டியர் நினைவு நாள், மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது. மதுரை மாவட்டம் முழுக்க, டாஸ்மாக் மதுக் கடைகளை அக் 27 முதல் 30-ந் தேதி வரை மூடுமாறு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்படுவதாக ஆட்சியர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

    இதனால் குடிமக்கள், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற அண்டை மாநிலங்களுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad