Header Ads

  • சற்று முன்

    நாட்றம்பள்ளி அருகே மண் கடத்தல் ஈடுபட்ட ஜேசிபி,டிப்பர் வண்டிகள் பறிமுதல் மூன்று பேர் கைது



    நாட்றம்பள்ளி அருகே மண் கடத்தல் ஈடுபட்ட ஜேசிபி,டிப்பர் வண்டிகள் பறிமுதல் மூன்று பேர் கைது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் நடவடிக்கை!

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களையும் வாகனங்களையும் பறிமுதல் செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.



    அதன் அடிப்படையில் சுண்ணாம்பு குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபொழுது ஷாகித் என்பவருக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியில் மண் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது 
    இதனால் தனி படை போலீசார் லாரி மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்தனர்
    மேலும் மண் கடத்தலில் ஈடுபட்ட ஷாகித், சதீஷ்,  நசீர், ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அதே போல வெலக்கல்நத்தம் பகுதியில் செயற்கை மணல் தயாரிக்கும் கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad