கோவில்பட்டி அருகே ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர்,தேனி,திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30,க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தன. போட்டி சூரங்குடி-தூத்துக்குடி சாலையில் நடைபெற்றது. போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறிய மாட்டு வண்டியில் 17,ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 6 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை