Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. 


    இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்,இதில் வருஷாபிஷேகம் கட்டளைதாரர் காளிராஜன்,  பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, முன்னாள் பொருளாளர் வேல்முருகன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் பத்மாவதி, அழகர்சாமி, பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad