Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆண்கள் அரைநிர்வாண கண்டன ஆர்பாட்டம்

    சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் தமிழக அரசின் கவனத்திற்கு இருக்கும் வகையில் மாநில தலைவர் வி.அ.பாலசுப்ரமணியன், மாநில பொதுச் செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநில பொருளாளர் தோழர் S.ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்துரை வழங்க தொல்திருமவளவன், M.P., நிறுவன தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர் நா.பெரியசாமி செயலாளர் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், இரா. அந்திரிதாஸ் ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு , ஆண்கள் அரைநிர்வாண போரட்டம் பொன் கிருஷ்ணமூர்த்தி, தோழர் சண்முகம், கு.லோகநாதன் வாழ்த்துரை வழங்கினர்.

    கலைஞர் வழங்கிய இணைப் பட்ட மதிக்கப்பட வேண்டும். நியாய வாடகை நிர்ணயக்குழு அமைத்து 11 மாதங்கள் கடந்தும் பரிந்துரை செய்யவில்லை. விரைந்து பரிந்துரை செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும். நிர்ணயக்குழுவின் பரிந்துரை வெளிவரும் வரை குடியிருப்போர் மீது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். 2010 தில் டாக்டர் கலைஞர் அவர்களும் தற்போதைய முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிவித்து நடைமுறையில் இருந்த 456/ 298 அரசாணைகளை கலைஞர் அறிவித்ததாலேயே கடந்த ஆட்சியில் புறந்தள்ளப்பட்ட அரசாணைகள் தொடர வழிவகை காண வேண்டும். 

    போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிலைகுலைந்த எங்கள்  வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த அரசின் கவனத்தை இருக்கும் வகையில் ஆண்கள் அரை நிர்வாண  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை தவிர்த்து வெளி மாவட்டங்களிருந்து திரளான ஆண்கள் , பெண்கள் கலந்து கொண்டனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad