Header Ads

  • சற்று முன்

    சினிமாவில் அட்ஜெஸ்ட்மென் குறித்து ஓப்பனாக வெளிப்படுத்திய ஸ்ரீநிதி மேனன்

    செந்துரப் பூவே சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீநிதி மேனன். சீரியல், சினிமா என பிஸியாக வலம் வரும் ஸ்ரீநிதி மேனன், நடிக்க வரும் முன் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'சினிமாத்துறையில் தான் வந்த நாளில் இருந்தே பாலியல் ரீதியான தொல்லைகள் இருந்து வருகிறது' என ஓப்பனாக கூறியுள்ளார்.

    ஸ்ரீநிதி மேனன், 'எனக்கு சென்டிமெண்ட்டான காட்சிகளில் கிலிசரின் பயன்படுத்த மாட்டேன். எதையாவது ஒன்றை நினைத்து அழுதபடி நடித்துவிடுவேன். ஆனால், நான் எதை நினைத்து அழுவேன் என்று மட்டும் கேட்க வேண்டாம். ஒருவேளை நான் நடிக்க வரவில்லை என்றால் ரைடர் ஆகியிருப்பேன். என்னுடைய எல்லாவற்றையும் தீர்மானிப்பது அம்மா தான். 

    அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க 

    சினிமாவுக்கு ஆரம்பத்தில் வரும் போது, அட்ஜஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. சாப்பாடு, சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றாங்கன்னு நினைத்ததுண்டு. அதனால் நானும், விபரம் தெரியாமல் சாப்பாடு, சம்பளம் தானே அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்பேன். அதன்பிறகு தன் அது என்னவென்றே புரியும். நமக்கு விருப்பமில்லை என்றால், ஆரம்பத்திலேயே அதை ஒதுக்கி விடுவேன் . பார்த்துக்கொள்ளலாம், சமாளித்து கொள்ளலாம் என நினைத்து வாய்ப்புக்காக சரி என்று கூறிவிட்டால், கடைசி வரை அது தொல்லையாகி கெட்ட பெயரும் வந்துவிடும்.' 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad