Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

    தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் -  10 - க்கும் மேற்பட்ட  மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்ககோரிக்கை.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் -  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், சாலையோரத்தில் செல்லும் வாகனங்கள், மற்றும் நடை பயணிகள் உள்ளிட்டோர் மிகுந்த பீதியில் உள்ளனர். மின்சார வாரியம் போர்க்கால நடவடிக்கையில் , விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீர் செய்து பெரும் உயிரிழப்பை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad