Header Ads

  • சற்று முன்

    அண்ணாமலைக்கு என்ன சொன்னாலும் மண்டைக்கு என்றது என்கிறார் தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன்

    சத்துணவில் வழங்கப்படும் முட்டை அழுகிய முட்டை அண்ணாமலை குற்றச்சாட்டு - அறிக்கையின் மூலம் பலமுறை கூறியும் மண்டையில் ஏறவில்லை அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு கோவில்பட்டி அருகே அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி


    மகாகவி பாரதியாரின் 141 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவருட்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமூகநலன்  மகளிர் துறை அமைச்சர் கீதாஜீவன் சமூக நலத்துறை மூலமாக சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்படும் முட்டை அழுகி இருப்பதாகவும் அதில் ஊழல் நடப்பதாகவும் அண்ணாமலை கூறியதற்கு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி

    போக்குவரத்தின் போது சில முட்டைகள் உடைந்து அழுகும் நிலை ஏற்படுகிறது இம்மாதிரியான முட்டைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்தகாரர்கள் இடம் கொடுக்கபட்டு மாற்ற பட்டு வருகிறது இது தான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

    இம் மாதிரி 6 இடங்களில் இல்லை 50 இடங்களில் கூட இருக்கலாம் இது எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற வழிமுறைதான் அதுவும்  மற்ற பட்டு வருகிறது இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளேன் அவர் மண்டையில் தான் ஏறவில்லை ஏன் என்று தெரியவில்லை. பண மதிப்பிழப்பு கொள்கையின் மீதான  குற்றச்சாட்டை காலம் காலமாக எதிர்கட்சிகள் கூறி வருகிறோம். இதனால் பொருளாதாரம் ஏற்றம் இல்லை  மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர் 

    நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை எங்கள் தலைவர் ஸ்டாலினை பத்தி பேசுவதற்கு தகுதியில்லை. எங்களது தொண்டர்கள் கொள்கை ரீதியான தொண்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் அமைத்ததில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை கடற்கரையோரம் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்பதற்காகவே மரப்பாலம் அமைக்கப்பட்டது. மரத்தையே ஒடித்து போடும் புயல் மரப்பாலம் எம்மாத்திரம் புயலால் மரப்பாலம் பாதிக்கப்பட்டுள்ளது அதை விரைவில் மாற்றி அமைத்து விடுவோம். இதை எதிர்க்கட்சியினர் கெட்ட  பெயர் உண்டாக்க வேண்டும் என்றே கூறி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad