Header Ads

  • சற்று முன்

    சப் இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி 5 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞர்கள் 4 பேர் கைது.


    கைப்பேசியில் காவல் சாா்பு- ஆய்வாளா் பேசுவதாகக் கூறி கரூா் இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்ட கோவையைச் சோந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

    கரூா் தாந்தோணிமலையைச் சோந்த வேணுகோபால் மகன் சுரேந்தா் (28). இவரது கைப்பேசிக்கு டிச. 13ஆம்தேதி வந்த அழைப்பில், 'தான் தாம்பரம் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எஸ்.ஐ. முருகன் பேசுவதாகவும், தங்களது கைப்பேசி கட்செவி அஞ்சல் எண் ஆபாச படம் எடுக்கும் கட்செவி அஞ்சல் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, உங்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் சென்னை வரவேண்டும். வரவில்லையென்றால் கரூா் போலீஸை வைத்து கைது செய்வேன்' எனக் கூறியுள்ளாா். பின்னா், சுரேந்தரிடம் இதற்கான அபராதத் தொகை ரூ. 5ஆயிரத்தை கட்டிவிடு, இல்லையேல் வீட்டுக்கு வந்து போலீஸாா் விசாரிப்பாா்கள் எனக்கூறியுள்ளாா். இதனால் பயந்துபோன சுரேந்தா், கைப்பேசியில் பேசிய நபரின் எண்ணுக்கு இணையவழியில் ரூ.5 ஆயிரம் அனுப்பியுள்ளாா். பிறகு, சுரேந்தா் கைப்பேசியில் ட்ரூகாலரில் பாா்த்தபோது, அந்த எண், சித்து என்ற பெயரில் பதிவாய் இருந்தது.

    இதனால், சந்தேகத்தின்பேரில் சுரேந்தா் புதன்கிழமை காலை கரூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் சுரேந்தரிடம் மோசடி செய்தவா் கோவையில் இருப்பது தெரியவந்தது. பிறகு போலீஸாா் கோவைச் சென்று, கோவை வடவள்ளியைச் சோந்த பாலமுருகன் மகன் கெளதம் (19) என்பரை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சோந்த குமாா் மகன் மாதவன் (19), சாமுவேல் மகன் ஜான்பீட்டா் (19), சிவா மகன் சந்தனசொணகுமாா் (19) ஆகியோரையும் கைது செய்து கரூருக்கு அழைத்து வந்தனா். இதையடுத்து கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை இரவு 4 பேரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞா்கள் 4 பேரும் கோவை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இதேபோன்று குற்றங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad