Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் ,ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் தீபம் ஏற்று விழா ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மஹாலில் தொடங்கப்பட்டது


    வேலூர் மாவட்டம் ,ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் தீபம் ஏற்று விழா ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மஹாலில் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரபா துவக்கி வைத்தார். ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரி முதல்வர் வரவேற்புரை ஆற்றினார் .டாக்டர் என். பாலாஜி  துவக்க உரையாற்றினார்.


    விழாவில் சிறப்பு விருந்தினர்களை கல்லூரியின் செவிலிய இணை இயக்குனர் பேராசிரியை லலிதா புருஷோத்தமன் அறிமுகப்படுத்தினார். விழாவில் டாக்டர் எம் .கண்ணகி இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைத்துறை அவர்கள் புதியதாக செவிலியர் கல்வி பயில வந்திருக்கும் மாணவிகளை பாராட்டி சிறப்புரையாற்றினார். ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் சாதனைகளை எழுத்து வடிவில் சிறப்பிக்கும் செய்தி மடல் சக்தி அம்மா அவர்களின் ஆசியோடு சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.விழாவில் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் ,பெற்றோர்களும், கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad