Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


    கோவில்பட்டி அருகே மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு கண்டித்து அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியும் காய்கறிகளை மாலையாக அணிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அத்தியாவசிய பொருள்களின்  விலை உயர்வை கண்டித்து எட்டயபுரம் நகர அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூதன முறையில் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி மற்றும் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், நட்சத்திர பேச்சாளர் கருணாநிதி, மற்றும் 15 ஆவது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad