Header Ads

  • சற்று முன்

    சாத்தூர் அருகே, மில் தொழிலாளி தற்கொலை.....

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - தாயில்பட்டி அருகேயுள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி குருலட்சுமி (26). சதீஷ்குமார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை விடுமுறையில், மடத்துப்பட்டிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர் உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சதீஷ்குமார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad