கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்
கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உள்நோயாளிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மருத்துவர் ராமமூர்த்தி,நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன்,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் பழனி குமார், முருகன், கோபி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை