Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை வாக்காளர் அட்டையில், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்.....

    விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 4ம் தேதி (ஞாயிறு கிழமை) நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வருகிறது. வாக்காளர்களே நேரிடையாக இணையதளங்கள் மூலமாக தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 934 வாக்குச் சாவடி மையங்களில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் வி காளமேகம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad