Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் திருமகள் திரை அரங்கில் தொடர்ந்து 5-வது நாளாக . நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண குவியும் பொதுமக்கள்.

    திருமகள் திரை அரங்கில் தொடர்ந்து 5-வது நாளாக . நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண குவியும் பொதுமக்கள். திருப்பத்தூர் நகர தலைவர் தமிழ்மணி ஏற்பாட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  திருமகள் தியேட்டரில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில்  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற திருப்பத்தூர் நகர தலைவரும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவருமான தமிழ்மணி தொடர்ந்து  5-வது நாளாக காலை காட்சிக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவு அளவில் தன்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரையரங்கில் அமர நாற்காலி கூட இல்லாமல் படத்தை கண்டு களித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன்  ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad