Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.


     தமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருளும் மாவட்ட கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமாரும் பொறுப்பேற்றார்.

    இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தமிழக அரசால் செங்கல்பட்டுக்கு பணிமாறுதல் செய்தும் சென்னை சிபிசிஐடி கிரைம் செல்லில் பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் ஆணையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட கண்காணிப்பாளர்  தற்போது கொரானா காலகட்டம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகளைக் கூறினார். அதுமட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்படும் சாலை விதிகளை கண்டிப்பாக பொதுமக்கள் கடைபிடிக்க வழிவகை செய்வேன் என கூறினார் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிதாக தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன் எனவே சில தினங்கள் கழித்து தான் திருப்பத்தூர் மாவட்டத்தின் நிறைகள் குறைகளை கூற முடியும் எனவும் தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad