குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சித்தார்த்தா சமூக நல அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா
மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சித்தார்த்தா சமூக நல அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தேஷ் சஞ்சய் ,தேஷ் ராகுல் ஆகிய இருவரும் 17 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை பாராட்டும் வகையில் சித்தார்த்தா சமூக நல அறக்கட்டளை சார்பில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர் இதில் அறக்கட்டளையின் செயலாளர் மூர்த்தி பொருளாளர் எம் .ஆர் கணேஷ் துணைச் செயலாளர் சுமன் மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் ராஜ்கமல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை