சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (14.11.2020) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டில் முழு கவச உடையணிந்து (PPE kit) அல்லும் பகலும் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி ஊக்கப்படுத்தினார். சிகிச்சை பெறும் நோயர்கள் நலம் விசாரித்தார் ,சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் போது ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜெயந்தி மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை