Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே மூட்டை ,மூட்டையாக 25 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்.


    கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை கடத்தி வந்து குடோனில் பதுக்கி வைத்திருந்த 25 டன் குட்காவை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.



    தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சென்னை ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் தகவல் வந்தது. 

    இதனை அடுத்து டிஎஸ்பி குமரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.காட்டூர் சிப்காட்டில் அம்மன் ரெகுலர் சர்வீஸ் என்ற குடோனை ஆய்வு செய்த போது மூட்டை ,மூட்டையாக இரண்டு கண்டைனர் மற்றும் மூன்று குட்டி யானை வாகனத்தில் 25 டன் குட்கா இருப்பது கண்டறியப்பட்டது

    .இதனை அடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர் பாலாஜி உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட தலைமறைவாக உள்ள முருகன் என்ற காரனோடை முருகனை தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 2 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது. கர்னாடக மாநிலத்தில் இருந்து வரும் போது அந்தந்த மாநில பதிவெண் போலியாக மாற்றி ,மாற்றி கடத்தி வந்தது தெரியவந்தது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad