நவின மயமாக்கப்பட்ட ராணிப்பேட்டை காவல் நிலையத்தை வேலூர் சரக DIG காமினி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை அரங்கம் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் நூலகம், சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு அறை மற்றும் மல்டிமீடியா அரங்கம் (Road safety multimedia hall), காவலர்களுக்கான ஓய்வு அறை ஆகியவற்றை சரக டிஐஜி காமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உதவி கண்காணிப்பாளர் பூரணி, ராணிப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார், காவல் காவல்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை