Header Ads

  • சற்று முன்

    உயர்கல்வி துறை செயளாலர் அபூர்வா கண்கானிப்பில் மண்டலம் 5 செயற்பொறியாளர் பழனி தலைமையில் நேற்று முதல் ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கப்பட்டது.



    சென்னை ராயபுரம் மண்டலம் - 5ல் ஜீ.ஏ.ரோடு பழைய வண்ணாரப்பேட்டை வார்டு 49ல் உயர்கல்வி துறை செயளாலர் அபூர்வா கண்கானிப்பில் மண்டலம் 5 செயற்பொறியாளர் பழனி தலைமையில் நேற்று முதல் ஆளில்லா விமானம் ட்ரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி  துவக்கப்பட்டது.

    அரசு ஒத்துழைப்புடன் ஆளில்லா விமானம் ட்ரோன் மூலமாக 16லிட்டர் தெளிக்ககூடிய  இந்த கிருமி நாசினி பழச்சாரு திரவ இயற்க்கைமுறை மூலமாக தயாரிக்கபட்டதாக பரிசோதனைகுழு மூலமாக அங்கீகரிபட்டு செயல்பாடுகளுக்கு வந்ததுள்ளது.இந்த கிருமி நாசினி எந்த பக்கவிளைவுகள் இல்லாதது எனவும் மேலிருந்து தெளிக்கபடும்போது  காற்றில் நோய்தொற்று தடுப்பு படலமாகமாறி  சுற்றியுள்ள பகுதிகளில் 4அல்லது 5மணிநேரம் கிருமிகளை கொள்ளும் திறன் கொண்டது என தெரிவித்தனர்.இதில் பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைகழகம் சுகார்தனா என்று அழைக்கபடும் பெங்களூர் நிருவனம் மற்றும் தக்ஸா என்கின்ற ஆளில்லா விமான ட்ரோன் நிருவனம் இந்தபணியில் ஈடுபட்டுள்ளது.இதில் இணை பொறியாளர் பிரபு,திரவ கண்டுபிடிப்பு கார்த்திக் நாராயணன்,தக்ஸா நிருவண செயல் அதிகாரி ராமநாதன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

    எமது செய்தியாளர் : ராஜ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad