பிரபல ரவுடி மணி (எ) மணிகண்டன் என்கவுண்டரில் போடு தள்ளப்பட்டார்
இதுவரை சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார். ரிலையன்ஸ் பாபு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது..விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான டீம் மணிகண்டனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியது. சென்னை கொரட்டூரில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்ததும் அவரைச் சுற்றி வளைத்தது காவல்துறை. அப்போது ``நான் சரணைடைந்து விடுகிறேன். வீட்டுக்குள் வாருங்கள். உடைமாற்றிக்கொண்டு வருகிறேன்” என்று ஆரோவில் காவல் நிலைய எஸ்.ஐ பிரபு மற்றும் தனிப்படையைச் சேர்ந்த எஸ்.ஐ பிரகாஷ் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.
வீட்டின் உள்ளே ஃப்ரிட்ஜுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த கத்தியால்
எஸ்.ஐ பிரபுவின் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பித்து ஓட முயற்சி செய்தார் மணிகண்டன். எஸ்.ஐ பிரகாஷ் தனது துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் அதே இடத்தில் மணிகண்டன் உயிரிழந்தார். தலையில் பலமாக வெட்டுப்பட்ட எஸ்.ஐ பிரபு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை