அதிர்ச்சியை ஏற்படுத்திய சட்ட திருத்த மசோதா .....
அபராதம் என்ற பெயரில் பகற் கொள்ளையாக உள்ளது.வாகன சட்ட திருத்த மசோதா சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணியாமல் வாகனம் இயக்கினால் அபராதம் தொகை 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும்,வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன இயக்கினால் அபராத தொகை ரூபாய் 500 இருந்து 5000 எனவும் மொத்தத்தில் தற்போது இருந்த அபராத தொகையிலிருந்து 10 மடங்கு அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்த சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக அரசு ஏற்காமல் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அபராதம் வசூலிப்பதுடன் மேலும் இந்த அரசு மறுபடியும் இந்த தவற்றை செய்யாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும். மக்களை காக்கும் இந்த அம்மா அரசு மக்களின் வாழக்கையை இருட்டடைப்பு செய்யாமல் காப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.
ஆசிரியர் : ஆ.வீ.கன்னையா
கருத்துகள் இல்லை