Header Ads

  • சற்று முன்

    திருநங்கையின் வேட்புமனு நிராகரிப்பால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு


    4 தொகுதி இடைத் தேர்தலில் ஒன்றான திருப்பரங்குன்றம் தொகுதியில் திருநங்கையான பாரதி கண்ணம்மா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் . வேட்புமனுவை சரி பார்த்த தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் 26A சரியாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறினார். பின்னர் பூர்த்தி செய்து கொடுத்தேன். மறுநாள் தேர்தல் அதிகாரியை சந்தித்து சரியாக உள்ளதா என்று கேட்க வந்தேன். ஆனால் யாரும் அதிகாரியை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை. இறுதியாக வேட்பாளர் அறிவிப்பு பட்டியலில்  முதலாவதாக பாரதி கண்ணம்மா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.படிவம் 2A விண்ணப்பம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டனர். யரோ தூண்டுதலின் பேரில் என்னுடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். அமைச்சருக்கு வேண்டியவர் என்றால் இரு இடங்களில் போட்டியிடலாம் திருநங்ககை என்றால் இளக்காரமா ? கொதித்தெழுந்த திருநங்ககை பாரதி கண்ணம்மா  நீதிமன்றத்தை நாடி மீண்டும் இதே திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவேன். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad