பழுதடைந்த நிலையில் எழில் நகர் ரயில்வே கேட்
ஆர்கே நகர் மணலி சாலை சாலை எழில் நகர் ரயில்வே கேட் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டி முதல் நடந்து செல்லும் பாதசாரிகள் வரை அச்சத்தில் கடக்கவேண்டிய சூழலில் உள்ளனர். விபத்தை தவிர்க்க பயன்படும் உபகாரணமே விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. தற்காலிமாக இரும்பு சங்கலி கொண்டு குறுக்கே கட்டுகின்றனர்.இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆகவே ரயில்வே துறை துரித நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டி அப் பகுதி போது மக்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை