காணாமற் போன கைபேசியை கண்டுபிடிக்கும் *“டிஜிகாப்” என்கிற செயலியை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், அவர்களால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், *“டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்து நிகழ்வை ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார் இந்நிகழ்வில் பேசிய அவர் செல்போன்கள் தொலைத்து விட்டால் அவற்ளை கண்டுபிக்க இந்த செயல் பெரிதும் உதவும் என்று தெரிவித்தார் இந்த செயலி மூலம் திருடு போன இரு சக்கர வாகனங்கை யும் கண்டுபிடித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் இந்த செயலியால் அருகில் உள்ள காவல் நிலையில் கள்தேசம் காவல்துறையின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார் இதனை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்ரி கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
*இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் திரு.விஜய்சேதுபதிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். வண்ண மயமாய் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் செல்போன்களை தவற விட்ட100 பேர்களின் செல்போன்கள் அவர்களிடம் ஒப்படைக்கபப்டன.
செய்தியாளர் : தமிழன் வடிவேலன்
கருத்துகள் இல்லை