மாநகர பேரூந்து மோதி மூதாட்டி பலி
சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் சாலை ஓரம் பீசாத் பேகம். 66 வயது மூதாட்டியான இவர் நடந்து சென்ற போது வண்டலூரில் இருந்து மந்தைவெளிக்கு சென்ற 21 ஜி பேருந்து அவர் மீது மோதியது, இதில் தடுமாறி விழுந்த அவர் மீது பேருந்தின் முன்சக்கரமும், பின்சக்கரமும் ஏறின.
இதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்தின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கு ஓட்டுநரின் கவனக் குறைவு காரணமா, அல்லது மூதாட்டியின் தவறு காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை