Header Ads

  • சற்று முன்

    செய்தியாளர்களிடம் தகராறு செய்த நடிகர் விஜயகுமார் மகள் வனிதா



    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் 19 வது தெருவில் திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை  திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார். 


    படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதுவரை வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து விஜயகுமார் கேட்டபோது இது என்னுடைய சொத்து காலி செய்ய முடியாது என்று கூறி உள்ளார். இதுகுறித்து விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். இவருக்கும் மகள் வனிதாவுக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சொத்து விஜயகுமாரின் இன்னொரு மகள் ஸ்ரீ தேவியின் பெயரில் உள்ளது இந்த வீடு 20 வருசத்துக்கு குத்தகை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடுத்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்ய இன்று காலை வந்தனர். இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களிடம் வீட்டில் இருந்து வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார். மேலும் அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் : ஆன்டனி ரேவந்த்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad