Header Ads

  • சற்று முன்

    முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகார் வாஜ்பாய் உடல் கவலைக்கிடம் எம்ஸ் மருத்துவ அறிக்கை


    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அவ்வப்போது பிரதமர் மோடி சென்று சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இன்று இரவு 7.15 மணி அளவில் வாஜ்பாயை சந்தித்தார். 10 நிமிடங்களுக்கு மருத்துவமனையில் இருந்த பிரதமர் மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தியுள்ளது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை.



    இது தொடர்பான எய்ம்ஸ் அறிக்கையில், "கடந்த 9 வாரங்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். துரதிஷ்டவசமா கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமான பின்டைவை சந்தித்துள்ளது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமக உள்ளது. உயிர் காக்கும் கருவுகள் பொருத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு உள்ளிட்டவர்களும் எய்ம்ஸ் வந்து வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், பல மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்களும் தொடர்;து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad