ஆவடியில் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களுக்கு மிரட்டல்.
சென்னை அம்பத்தூர் அருகே திருமுல்லைவாயல் தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொன் ராதாகிருஷ்ணன் வருவதாக செய்தி சேகரிக்க அழைப்பு விடுத்ததன் பேரில் செய்தியாளர்கள் அங்கு சென்று இருந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி வரவில்லை. அதற்கு பதிலாக தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்திக்கும் போது செய்தியாளர்கள் கேட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இயற்கை பேரிடர்களுக்கு அதிக நிவாரணம் வழங்கபடுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் கேள்விக்கு பதில் கொடுத்து முடிக்கும் போது கைதட்டி கரகோஷம் எழுப்பினர். அப்போது செய்தியாளர்கள் கை தட்ட வேண்டாம் என்று கூறியதற்காக அங்கு வந்திருந்த RSS தொண்டர்கள் செய்தியாளர்களை அவதுரக பேசியும் அடிக்க முற்பட்டனர். இந்த அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழிசை.திட்டமிட்டு தமிழிசையை அவமதிக்க வேண்டும் என்றே ஆர் எஸ் எஸ் அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு துவங்கும் முன்பே தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டு வந்தனர்.அதற்கு செய்தியாளர்களை பயன்படுத்தி கொண்டனர்.
கருத்துகள் இல்லை