கோவில்பட்டி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி
கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை சார்பில் வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.
கட்டுரை போடடியை மதுவிலக்கு டிஎஸ்பி பொன்ராம் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா். போட்டியில் மாணவர்கள் மனோஜ்குமார் முதலிடததினையும் , விஜய்பாரத் 2-ம் இடமும், செல்வராஜ் 3வது இடமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் முனியசாமி பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் கரியல், தலைமை காவலர் அமலராஜ், காவலர் பிரிதிவிராஜ், கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை