Header Ads

  • சற்று முன்

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி சதம்!



    கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் கேப்டவுனில் நடைபெற்றும் வரும் இந்தியா- தென்னாபிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி சதம் அடித்தார். ஏற்கெனவே நடைபெற்ற டெஸ்ட் மேட்ச்களில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது.


    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இதில் களமிறங்கிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தார். அவர் 119 பந்துகளில் 7 பவுண்டரிகளை அடித்துள்ளார். விராத் கோஹ்லி இதுவரை விளையாடியுள்ள ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ள சதத்தில் இது 34-ஆவது சதமாகும். இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்துள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad