Header Ads

  • சற்று முன்

    சொத்து தகராரில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இளைஞ்ஞர் பலி !!!


    சேலம்: சேலத்தில் சொத்து தகராறு காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தீக்குளித்த இளைஞர் 97 சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன். இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலத்தை பிரித்து தனது பங்கை வழங்குமாறு மோகன் அவரது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு உடன் பிறந்தவர்கள் மறுத்ததாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோகன் வியாழனன்று மனு அளிக்க சென்றுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு இருந்ததால் எதிரே இருந்த அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்குள் சென்று மருத்துவமனை முதல்வர் அறை அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 97 சதவிகிதம் தீக்காயங்களுடன் மோகன் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad